வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2016 (10:46 IST)

பறக்கும் விமானத்தில் பாம்பு - அலறிய பயணிகள்; துணிந்து பிடித்த பெண் [வீடியோ]

மெக்சிகோவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாம்பு வந்ததை அடுத்து, விமானம் மெக்சிகோ விமான நிலையத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
 

 
கடந்த ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோ நகரில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் பறந்து சென்றுள்ளது. அப்போது, தலைக்கு மேல் இருந்த பயணிகளின் உடைமைகளை வைக்கும் பகுதியில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. பாம்பு தொங்கிக் கொண்டு கீழே விழுவதைப் போல் இருந்ததைக் கண்ட பயணிகள் அலறினர்.
 
ஆனால், பெண் ஒருவர் தனது போர்வை மூலமாக பாம்பைப் பிடித்துள்ளார். இது குறித்து மெதினா கூறுகையில், விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக போர்வை மூலமாக பாம்பு கட்டுக்குள் வந்துவிட்டது. பின்னர், விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், இந்த காட்சியை பார்த்தபோது ஹாலிவுட் நடிகர் நடித்திருந்த ''ஸ்நேக்ஸ் ஆன் எ பிளேன்'' என்ற படத்தின் காட்சியை த்ரில்லாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ: