வீடு வாடகைக்கு தருவதாக கூறி பல பெண்களை பாலியல் பலத்காரம் செய்த வாலிபர்
மர்ம நபர் ஒருவர் பாரிஸில் வீடு வாடகைக்கு தருவதாக கூறி பெண்களை கற்பழித்துவிட்டு அவர்களின் தொலைபேசிகளையும் அபகரித்து சென்றுள்ளார்.
மர்ம மனிதன் ஒருவர் பிரான்ஸ் தலைநகரம் பாரிஸ் நகரில் வீடு வாடகைக்கு கிடைப்பதாக கூறி விளம்பரப்படுத்தியதோடு, தனது தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில் அந்த தொடர்பு எண்ணிற்கு பெண்கள் தொடர்பு கொண்டால் மட்டும், தான் வீட்டினை பார்க்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை நம்பி வீடு பார்க்கவரும் பெண்களுடன் அவர்களோடு சேர்ந்து வீடு பார்க்க செல்வது போல சென்று வீட்டினுள் சென்றவுடன் பெண்களை கத்தி முனையில் அச்சுறுத்தி அவர்களை கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர்களிடமுள்ள விலைமதிப்புள்ள நகைகள், தொலைபேசி, பணம் ஆகியவற்றை அபகரித்து சென்றுள்ளார்,
இவரால் பல பெண்கள் பாதிப்படைந்து இருப்பதாகவும், இதில் மூன்று பெண்கள் மட்டுமே முறைப்பாடுகள் தந்திருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த நபரை கைது செய்துள்ள காவல் துறையினர், இவரிடமிருந்து கத்தி, கட்டுவதற்கு பயன்படுத்தும் டேப் ரோல், சலோ டேப் என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.