1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2016 (16:52 IST)

இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானம் துபாயில் தரையிறங்கியபோது விபத்து - வீடியோ

இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானம் துபாய் தரையில் மோதி விபத்து - வீடியோ

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எமிரெட்ஸ் 777 ரக விமானம் துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதியதில் விமானத்தின் வால் பகுதி முற்றிலும் எரிந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.


 
இதில், பயணித்த, பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. விமானம் தரையில் மோதிய சில நொடிகளில், அதிகாரிகள் பயணிகளை வெளியேற்றியதால், பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் கூறியுள்ளார். தற்போது, தீயணைப்பு படையினர், அந்த விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து வருகின்றனர்.