1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (18:13 IST)

இந்தியர்களோடு எண்ணெய் கப்பலை கடத்திய கொள்ளையர்கள்!

ஆப்பிரிக்காவில் எரிபொருள் எண்ணெய் எடுத்து சென்ற கப்பலையும் 20 இந்திய ஊழியர்களையும் கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியிலுள்ள கினியா வளைகுடாவில் எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்திருக்கிறது. காலை 7 மணி அளவில் திடீரென கப்பலின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கப்பலில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 20 இந்தியர்களும் இருந்துள்ளனர்.

இதுகுறித்து கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ள செய்தியில் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து கப்பல் குறித்த தகவல்களை விசாரித்து வருவதாகவும், கொள்ளையர்களால் கப்பல் மற்றும் ஊழியர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைஜீரிய கடல் எல்லையில் இதேபோன்று ஒரு கப்பல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.