1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (20:22 IST)

கடற்படை வீரரின் உயிரைக் காப்பாற்றிய செல்ல நாய்…

யார் நம்மைக் கைவிட்டாலும் சரி நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் சாகும் வரை நன்றியுணர்வுடன் நடந்து கொள்ளும்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

கரோலினா மாகாணதிதில் ஈஸ்ட் ஈஸ்ட் ஹெல்த் சிஸ்டத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு முதியவரின் புகைப்படத்தை பகிந்துள்ளது. அவர் முன்னாள் கடற்படை வீரர் . இவர் ஓரியண்டலில் உள்ள தனது வீட்டுப் படலில் தனது செல்ல நாயுடன் வசித்து வந்தார்.

.இந்நிலையில் திடீரென்று முதியவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட அவர் யாருக்கும் தொலைபேசியை எடுத்துப் பேச முடியாத நிலையில்தொலைபேசியை எடுத்து வந்து தருமாறு நாயிடன் கூற நாயும் அப்படியே செய்துள்ளது.

அதில் எப்படியோ மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்டு முதியவரின் உயிரைக் காப்பாற்றி விட்டனர்.

முதியவரின் உயிரை உரிய நேரத்தில் காப்பாற்ற உதவிய புபு சிஹூஹா என்ற இன நாய்க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.