வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (15:28 IST)

2018ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு...

உலகில் வழங்கப்படும் மிகவும் உயர்ந்த பரிசு மற்றும் அங்கீகாரத்தில்  நோபல் பரிசும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆல்பிரட் நோபல் என்ற அறிஞரின் பெயரால் நோபல் பரிசு அளிக்கப்படுவது வழக்கம்.
 
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மருத்துவத்துகான நோபல் பரிசு நோபல் ஜேம்ஸ் பி.ஆலிசன், தசுகோ ஹோஞ்ஹோவுக்கு  ஆகியோருக்கு வழங்குவதாக நோபல் பரிசு கமிட்டிக் குழு ஒருமனதாக இன்று பிற்பகலில் தெரிவித்துள்ளது.
 
புற்று நோய் தொடர்பான மருத்துவக் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மருத்துவத்துக்கான நோபல் பரிசைஜேம்ஸ் பி.ஆலிசன், தசுகோ ஹோஞ்ஹோவுக்கு  ஆகிய  இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.