வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 1 செப்டம்பர் 2014 (13:18 IST)

ஓய்வு பெற்றார் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையராக பதவி வகித்த நவநீதம் பிள்ளை அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் என்று நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐ.நா.விசாரணை குழு தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நவநீதம் பிள்ளை 1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார்.

பின்னர் 1982ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

2003 ஆம் ஆண்டு அவருக்கு பெண்கள் உரிமைக்கான முதலாவது குரூபர் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.