1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (15:17 IST)

மனைவியையும், அவரின் காதலனையும் காரை ஏற்றிக் கொன்ற கணவன் : வீடியோ

சீனாவில் ஒருவர் தன் முன்னாள் மனைவியையும், அவரது காதலனையும் காவல் நிலையத்திற்கு அருகிலேயே காரை ஏற்றிக் கொன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சீனாவைச் சேர்ந்தவர் ஷாங்(30). இவரின் மனைவி குன் இப்போது அவருடன் இல்லை. இவரைப் பிரிந்து வேறு ஒருவடன் சென்று விட்டார். இதனால் ஷாங் தன் மனைவி மீதும், மனைவியை தன்னிடமிருந்து பிரித்த அவரின் காதலர் மீது கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில், அவரது மனைவியும், அவரின் காதலரும், சீனாவின் அன்ஹூய் மகாணத்தில் உள்ள தியான்ச் ஆங் எனும் இடத்தில் உள்ள ஒரு காவல் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்களின் பின்புறமாக காரில் அதிவேகமாக வந்த ஷாங், அவர்கள் இருவர் மீதும் காரை ஏற்றினார். இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
 
அதன் பின்னரும் கொலை வெறி அடங்காத ஷாங், காரை நிறுத்திவிட்டு வந்து தன் மனிவியையும், அவரின் காதலரையும் காலால் மிதிக்கிறார். இது அனைத்தும் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. போலிஸ் நிலையம் அருகிலேயே இச்சம்பவம்  நடந்ததால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியானார்கள்.
 
எனினும், போலிஸ் அதிகாரிகள் உடனடியாக வந்து அவரைப் பிடித்து கைது செய்தனர்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..