வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2017 (20:01 IST)

இளம்பெண்களை வசப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய பாதிரியார்

இத்தாலியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் இளம்பெண்களை வசப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியதாக அவரது முன்னாள் காதலிகள் புகார் அளித்துள்ளனர்.


 

 
இத்தாலி வெனிட்டோ பிராந்தியத்தில் உள்ள பதுவா நகரைச் சேர்ந்த ஆண்ட்ரியா கண்டின்(48) என்பவர் கத்லோகிக்க பாதிரியாராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மீது இவரது முன்னாள் காதலிகள் சில குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
 
அதில், இவர் ரகசியமாக பாலியல் தொழில் மூலம் வருமானம் ஈட்டி வருவதாகவும், அதற்கு 15 இளம்பெண்களை பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
 
சோதனையில் அவரது வீட்டில் இருந்து ஆபாச புகைப்படம் மற்றும் சிடிகள் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து 49வயது பெண் ஒருவர் கூறுகையில், அவருடன் எனக்கு ரகசிய தொடர்ப்பு இருந்தது, பின் அவருக்கு எண்ணற்ற பெண்ளுடன் தொடப்புள்ளதைக் கண்டு நாண் விலகிவிட்டேன் என்றார்.
 
பாதிரியார் மீதான் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.