1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 3 மே 2015 (15:55 IST)

அமெரிக்கா: இந்திய வம்சாவளி பெண் மர்ம நபர்களால் சுட்டு படுகொலை

அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கியால் பலியானோர் குறித்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது இந்திய வம்சாவளி  பெண் ஒருவரை மர்ம நபர்கள் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த மிருதுளாபென் படேல் என்பவர் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் தற்போது வசித்து வருகிறார். மேலும் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் மிருதுளாபென் பணியில் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் சுருட்டு கேட்டுள்ளார். பின்னர் அந்த மர்ம நபர் மிருதுளாபென்னை திடீரென சுட்டு சாய்த்துள்ளார். உடனே மிருதுளாபென் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மிருதுளாபென் இன்று பரிதாபமாக பலியானார்.

மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.