வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (15:19 IST)

தாய்லாந்தில் இந்தியர் சுட்டுக்கொலை

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற  இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் ராத்சத்தேவி மாவட்டத்தில் உள்ள பெவிலியன் ஹோட்டல் அருகே இரு தரப்பினரிடையே கடுமையான கோதல் ஏற்பட்டது.
 
இந்த கடுமையான மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாத்தி மாத்தி சுட்டுக்கொண்டனர். அப்போது அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இந்திய சுற்றுலாப் பயணி தீரஜும், லாவோ சுற்றுலா பயணி கியோவாங்சா ஆகிய இருவரும் குண்டடிப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர்.
 
மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.