ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (15:45 IST)

ஐஸ்கிரீமோடு வைரஸை அடைத்து விற்ற சீனா?

சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, அந்த நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 219 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சீனாவில் தியான்ஜின் என்ற நகரத்தில் இயங்கி வரும் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிறுவனத்துக்கு ஐஸ்கிரீம் தயாரிப்புக்கான பால் பவுடர் போன்ற மூலப் பொருட்கள் நியூசிலாந்து, உக்ரைன் ஆகிய நடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே 1,812 பெட்டி ஐஸ்கிரீம் தயாரித்து அனுப்பி இருக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் பெட்டிகள் எங்கெங்கு அனுப்பட்டுள்ள எனவும் ஆராயப்பட்டு வருகிறது.