வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 18 மே 2016 (14:15 IST)

திருமணமான சிறிது நேரத்தில் மணமகளை விவாகரத்து செய்த மணமகன்

செல்போனில் மூழ்கியிருந்த மனைவியை திருமணமான சிறிது நேரத்திலேயே ஒருவர் விவாகரத்து செய்தார்.


 

 
சமீபத்தில், சவுதி அரேபியாவில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. திருமண நிகழ்ச்சி முடிந்து, புதுமண தம்பதி ஓட்டலுக்கு வந்துள்ளனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தன்னுடைய செல்போனில் மூழ்கினார். 
 
அவருடன் பேச விரும்புவதாக மணமகன் கூறியுள்ளார். ஆனால் மணப்பெண் அதை கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து மணமகன் கேட்டதற்கு, தன்னுடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த தோழிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
 
அப்படியெனில் நான் உனக்கு முக்கியம் இல்லையா என்று கேட்டுள்ளார் மணமகன். அதற்கு மணமகள் ஆமாம் என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மணமகன், அவரை விவாகரத்து செய்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
 
திருமணமான சில நிமிடங்களிலேயே மணமகன்,  மனைவியை விவாகரத்து செய்தால், திருமண விழாவிற்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.