செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (21:49 IST)

வேலையைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்த கணவன்!!

மனைவி வெளியே சென்று வேலை பார்ப்பது பிடிக்காமல் மனைவின் தலையை கணவன் துண்டித்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மனைவி தொழிற்சாலையில் வேலை பார்ப்பது பிடிக்காமல் கணவன் அவரை வேலையை விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 
 
ஆனால், மனைவி அதை கேட்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து கோபத்தில் மனைவியின் தலையை துண்டித்துள்ளார்.
 
முதல் கட்ட விசாரணையிலேயே போலீஸார் கணவனை கைது செய்துள்ளனர். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.