1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2017 (20:08 IST)

டயானாவின் 20வது நினைவு தினம்: பார்வைக்கு வரும் அவரது பொருட்கள்!!

இளவரசி டயானா உயிரிழந்து இருபது ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.


 
 
பிரித்தானியா இளவரசி டயானா கார் விபத்தில் 1997 ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆனால், அவரது மரணம் திட்டமிட்ட கொலை என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், டயானா இறந்து 20 ஆண்டுகள் ஆனாதையடுத்து பக்கிங்ஹாம் அரண்மனையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
 
டயானாவின் கடிதங்கள், புகைப்படங்கள், டயானா விரும்பி கேட்ட பாடல்கள் அடங்கிய கேசட்டுகள், ரேடியோ போன்ற பொருட்களும் பொதுமக்கள் பார்வைக்கு வரவுள்ளன.