வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 5 ஜூன் 2017 (19:49 IST)

ரஷ்யாவில் மோடி கருத்துக்கு ஆதரவு அளித்த சீனா

ரஷ்யாவில் மோடி கருத்துக்கு ஆதரவு அளித்த சீனா

ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில், இந்தியா - சீனா எல்லை பிரச்சை குறித்து மோடி தெரிவித்த கருத்துக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.


 

 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது வெளிநாடு சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்த பயணத்தில் ஒரு பகுதியாக ரஷ்யா சென்றுள்ள மோடி அங்கு நடைப்பெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றினார். 
 
அதில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சை உள்ளது உண்மைதான். கடந்த 40 வருடங்களில் எல்லை பிரச்சனை காரணமாக ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்கவில்லை, என்றார்.
 
மோடி இந்த வெளிப்படையான கருத்துக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹூவா கூறியதாவது:-
 
எல்லை பிரச்சனை குறித்த விவகாரத்தில் இருநாட்டு தலைவர்களும் முறையான கவனம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் சந்தித்துக் கொண்டே போது தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர், என்றார்.