வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (11:40 IST)

நிலவின் மர்ம பக்கங்கள்: சீனா ஆய்வு!

நிலவின் மர்ம பக்கத்தை ஆராய சீனா செயற்கைக்கோள் ஒன்றை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இந்த செயற்கை கோளுக்கு கியூகியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. 
 
சுமார் 400 கிலோ கொண்ட இந்த செயற்கைக்கோள் 3 ஆண்டுகளுக்கு அங்கு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகால இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 
 
இதுகுறித்து சீன அரசு தரப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, நிலவின் மறுபக்கம் மென்மையான நிலம் என்று கூறப்படுகிறது. அப்பக்கத்தை ஆராய்ச்சி செய்யும் ஒரு முக்கிய அடியை சீனா இன்று எடுத்து வைத்துள்ளது என தெரிவித்துள்ளது.  
 
ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து, 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூமி - நிலவு மாறும் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. அங்கிருந்து அந்த செயற்கைக்கோள் உச்சத்தைத் தொட வேண்டிய தூரம் 4,00,000 கிலோமீட்டர் தொலைவு ஆகும். 
 
மேலும், கியீகியாவோ செயற்கைக்கோள் பூமியின் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் நிலவின் மறுபக்கத்திற்கும் ஒரு பாலத்தை அமைத்துத்தரும் என்று சீன விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.