வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 26 ஜனவரி 2015 (17:00 IST)

சொந்த மகளை நிர்வாணமாக ஓவியம் வரைந்த தந்தை

சீனாவில், தந்தை தன் சொந்த மகளை தன்னுடைய புதிய பட தொகுப்பிற்காக நிர்வாண மாடலாகப் பயன்படுத்தி அவரை நிர்வாணமாக வரைந்துள்ளார். இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏபடுத்தியுள்ளது. இதனால் கலைஞர்கள் மற்றும் கலையை விரும்புவர்களிடம் பாலியல் அறநெறி குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தனது மகளின் நிர்வாண படங்களை பல்வேறு விலங்குகளுடன் இணைத்து வரைத்துள்ளார். இதனை கடுமையாக விமர்சித்து ஒருவர் உள்ளூர் நாளிதழில் எழுதினார். அதைத் தொடர்ந்து இணையம் முழுவதும் இவருக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. 
தனது மகளின் நிர்வாண படங்களை வரைந்த லி ஜுவாப்பிங் இதுகுறித்து தெரிவிக்கையில், "நான் என் மகள் மற்றும் மனைவியின் சம்மதம் வாங்கிய பின்னரே இந்த ஓவியத்தை வரைந்தேன். இந்த படங்களை வரையும்போது எங்கள் இருவருக்குமிடையில் எந்த விதமான எண்ணமும் இல்லை. என் மகளை குழந்தைப் பருவத்தில் குளிப்பாட்டியதற்கும் இதற்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. இதுகுறித்து அவரின் மகள் லி குயின் தெரிவிக்கையில், "நானும் ஓவியர் தான். அவர் ஓவியம் வரைவதற்காக நான் மாடலாக நின்றதை புனிதமாகக் கருதுகிறேன்" என்றார்.
மேலும் ஓவியங்கள் அடுத்த பக்கம்...