வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (12:33 IST)

ஏலியன் விண்கலத்தை கண்டறிந்து சாதனை ...திகில் நிறைந்த திருப்பங்கள்

விமானத்தை  இயக்கும் விமானிகளும், விமானத்தில் பயணிப்போரும் வெளிநாட்டினரும் அவ்வப்போது வேற்றுக்கிரக வாசிகள் என்று அழைக்கப்படுகிற ஏலியன்ஸை பார்த்ததாக கூறுவது செய்தித்தாள்களின் வாயிலாக காணமுடியும்
.
ஏலியன்ஸ் பற்றி பல்வேறு கதைகள் உலவினாலும் வதந்திகள்  பரவினாலும் இது எப்போதும் முடியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.
 
இந்நிலையில் பல்வேறு நாடுகள் பல கோடிகள் செலவு செய்து இந்த ஏலியன்ஸ் குறித்த  ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது ரஷ்ய கடற்படையின் ரகசிய அமைப்பின் இயக்குனர் அட்மிரல் என்பவர் ஏலியன்ஸ் பற்றி கூறியதாவது:
 
’பூமிக்குள் பலவித மர்மங்கள் இருக்கின்றன.அதில்  மனித அறிவிப்புக்கு அப்பாற்பட்ட பல அதிசயங்கள் உள்ளன .அதனால் விண்வெளியில் ஆராய்ச்சி செய்யாமல் பூமிக்கு அடியில் ஆராய்வது நலம்’ என்று கூறுகிறார்.
 
ரஷ்யாவில் சமீபத்தில் பாறைக்கு அடியில் மிக வித்தியாசமான ஒரு பொருளைக்கண்டுள்ளனர். பனிப்பாறைகளுக்கு கீழே கிடைத்த இப்பொருள் ஆதிகால எழுத்துருக்களை கொண்டதாக உள்ளதாக கூறியுள்ளனர்.
 
மேலும் இந்த பொருள் ஏலியன்ஸ் பயன்படுத்தும் விண்கலமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
 
தற்போது பெரும்பாலானவர்கள் ஏலியன்ஸ் இருப்பதை உறுதி செய்துவிட்டனர். நாஸாவும் இதை நம்புகிறது. நாஸா அதிகாரி, ஏலியன்ஸ் பற்றிய தகவலை அதிகார்வபூர்வமாக அடுத்த வருடம் அறிவிப்பார் என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.