வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 13 ஜனவரி 2016 (12:16 IST)

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.


 

 
ஆப்கானிஸ்தானில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள்  ஜலாலாபாத்தில் அமைந்துள்ளன.
 
இந்த பகுதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலானது இந்திய தூதரகத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், அங்கு பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.