1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 மே 2018 (19:03 IST)

இரண்டு கால்களை இழந்தவர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

சீனாவை சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
 
சீனாவை சேர்ந்த மலையேறும் வீரரான சியா யோபு (70) தனது 30 வயதில் எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயற்சித்த போது இரண்டு கால்களையும் இழந்தார். 
 
பின்னர் பல வருடங்களாக தனது விடா முயற்சியால் எவரஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சித்து வந்தவர் தற்போது ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இரண்டு கால்கள் இல்லாத நிலையில் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறியவர் என்ற சாதனையும் படைத்துள்ளார். 
 
இதனால் அவருக்கு உலகின் பல பகுதிகளில் இருந்து வாழ்த்துக்குள் குவிந்த வண்ணம் உள்ளது.