வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2016 (09:40 IST)

சித்ரவதை செய்வதற்கு 52 சதவீதம் பேர் ஆதரவு

சித்ரவதை செய்வதற்கு 52 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு, எதிரி போராளிகளிடமிருந்து தகவல்களை பெற சித்ரவதை செய்வது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு உலகம் முழுவதும் உள்ள 16 நாடுகளில் நடத்தப்பட்டது.
 
இதில் 52 சதவீதம் பேர் சித்ரவதை செய்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து செஞ்சிலுவை சங்கம் கூறியதாவது:-
 
எந்த சூழ்நிலையிலும் சித்ரவதை செய்வது சட்ட விரோதமானது. சித்ரவதை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.