வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (18:14 IST)

12 வயது சிறுவனை தந்தையாக்கிய 36 வயது பெண்ணுக்கு 6 ஆண்டு சிறை

பள்ளி மாணவனான 12 வயது சிறுவனை மயக்கி, உடலுறவுக்கு பயன்படுத்தி கருத்தரித்த ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
36 வயதாகும் அந்தப் பெண், தனது மகளை காரில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, மகளின் சகவகுப்பு மாணவன் என்ற முறையில் மேற்படி சிறுவனையும் அவ்வப்போது ஏற்றிச் செல்வது வழக்கம். கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பழக்கத்தை அந்த சிறுவன் பன்னிரெண்டு வயதை அடைந்தபோது காதலாகவும், தனது ஆசைக்கான வடிகாலாகவும் அந்தப் பெண் மாற்றி அமைத்துக் கொண்டார். 
 
இதையடுத்து, ஆணுறைகளை பயன்படுத்தாமல் அந்த சிறுவனுடன் பல சந்தர்ப்பங்களில் தகாத உறவை வைத்துக்கொண்ட அந்தப் பெண் கர்ப்பிணியாகி கடந்த மே மாதம் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். 
 
இச்சம்பவம் பற்றி அறிந்த சிறுவனின் குடும்பத்தார், தங்கள் மகனின் குழந்தைப் பருவத்தையும், குடும்ப ஒற்றுமையையும் அந்தப் பெண் சீர்குலைத்து விட்டதாக காவல்துறையில் புகார் அளித்ததுடன் விக்டோரியா கவுன்ட்டி நீதிமன்றத்தில் அந்தப் பெண் மீது வழக்கும் தொடர்ந்தனர். 
 
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஜேன் பாட்ரிக், ‘தனது மகன் போல் பாவித்து அவன் மீது அக்கறை செலுத்துவதை விடுத்து, தன்னுடைய உடல் சுகத்துக்காக தகாத முறையில் அந்தப் பச்சிளம் சிறுவனை பயன்படுத்திக் கொண்டு, இத்தனை சிறிய வயதில் அவனை தந்தையாக்கி, அவனுக்கு தேவையற்ற மன உளைச்சலை அளித்ததற்காக குற்றவாளிக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.