வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (10:35 IST)

100 குழந்தைகள் கடத்தல் விவகாரம் : இந்தியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்க குழந்தைகள் சுமார் 100 பேர் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு உள்ளதாகவும் , அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் சேரிஸ் சுமித் அதிபர் டிரம்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
 
கடத்தப்பட்ட குழந்தைகள் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப வாய்ப்பில்லை. அவர்கள் திரும்பும் வரை இந்திய குடிமக்களுக்கு கிடைக்கும் விசாக்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
 
மேலும் டிரம்ப் நிர்வாகம் தற்போதைய சட்டத்தை இன்னும் ஆக்ரோஷமாகப் பயன்படுத்த வேண்டும் அமெரிக்காவில் கடத்தப்பட்ட குழந்தைகள்  தங்கள் குடும்பத்தில் வந்து சேர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.