புலிட்சர் விருது பெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்
2014 ஆம் ஆண்டுக்கான கவிதை பிரிவுக்கான புலிட்சர் விருது அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் சேக்ஷாத்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கவிதை, இசை, நாடகம் மற்றும் பத்திரிகை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புலிட்சர் விருது வழங்கப்படுகின்றன.
அதன்படி இந்த ஆண்டு கவிதை பிரிவுக்கான விருது அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் சேக்ஷாத்திரி எழுதிய '3 செக்க்ஷன்ஸ்' ("3 Sections") என்ற கவிதை நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகளவில் கலை இலக்கிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் பரிசை பெறும் 5 வது இந்தியர் விஜய் சேக்ஷாத்திரி என்பது குறிப்பிடத்தக்கது.