வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2018
Written By
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2018 (12:27 IST)

பட்ஜெட் 2018-19: வர்த்தக சந்தை மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்பு....

மத்திய அரசின் சார்பாக 2018 ஆம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தற்போது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். 

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். சந்தைகள் மற்றும் கார்ப்ரேட் துறைகளில் எதிர்பார்ப்புகளின் பட்டியல் இதோ...
 
வரிகள்: 
1) கார்ப்ரேட் வரி விகிதத்தை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்க வேண்டும்
2) மாற்று விரி விதிப்பை 18.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதத்திற்கு குறைக்கவேண்டும்.
3) வரி விலக்குகளை மேம்படுத்த வேண்டும், தனிநபர்களுக்கான விலக்குகள் அதிகரிக்க வேண்டும்.
4) நீண்ட கால மூலதன முதலீடுகளில் ஆதாயங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். 
 
வேளாண்மை:
1) வேளாண் துறையில் முதலீடு ஊக்குவிக்க கடன் உத்தரவாதம் அளிக்கவேண்டும். 
2) பயிர் காப்பீட்டு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு.
3) அணைகள் மற்றும் கால்வாய்கள், பாசன முறைமைகளுக்கான செலவுகளை அதிகப்படுத்துதல்.
4) உர மானியங்களை குறைத்தல். 
 
வங்கிகள்:
1) கடனளிப்பவர்களிடம் அல்லாத செயல்பாட்டு சொத்துக்களை வழங்குவதற்கு முழு வரி விலக்கு அனுமதி வழங்க வேண்டும். 
2) ரூ.10,000-ல் இருந்து வங்கி வைப்புகளில் செலுத்தப்பட்ட வட்டிக்கு வரி விலக்குக்கான நுழைவாயிலை உயர்த்த வேண்டும். 
3) திவாலா குறியீட்டின் கீழ் நடவடிக்கைகளுக்கு வரி நிவாரணம் அளிக்க வேண்டும்.
 
உள்கட்டமைப்பு:
1) முந்தைய பட்ஜெட்டிலிருந்து சாலை கட்டமைப்பு 10-15 சதவிகிதம் முதலீடு அதிகரிக்க வேண்டும்.
2) மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவை இணைக்கும் பாரத்மலா திட்டம் உட்பட முக்கிய சாலை திட்டங்களுக்கான ஆதரவை வழங்குதல்.
3) 2017-18 வரவு செலவு திட்டத்தில் இருந்து ரயில்வே முதலீடுகள் 10 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும்.