1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (20:31 IST)

தீபாவளிக்கு முன் அறிவிப்பு, திருச்சியில் மாநாடு: ரஜினியின் மெகா பிளான்

இதோ வருகிறார், அதோ வருகிறார் என கடந்த 20 வருடங்களாக ஜகா வாங்கி கொண்டிருந்த ரஜினிகாந்த், ஒரு வழியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளிவந்து ஒரு வருடம் ஆகவுள்ள நிலையிலும் இன்னும் அரசியல் கட்சி அறிவிப்பு வரவில்லை என்பதால் ஒருசிலர் அவநம்பிக்கை அடைந்தனர். ஆனால் 'பேட்ட' படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் கட்சி ஆரம்பிக்கும் பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும் விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பு வெளிவரும் என்றும் ரஜினி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்

இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து சென்றபின்னர் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் என்பதை உறுதி செய்த பிரதமர், தமிழக பாஜகவினர்களை களத்தில் இறங்க தயாராகும்படி அறிவுறுத்தினாராம். இந்த தகவல் ரஜினிக்கு சென்றதை அடுத்து தீபாவளிக்கு முன் கட்சி அறிவிப்பு பின்னர் டிசம்பரில் கட்சி பொதுக்கூட்டம் என்பதை முடிவு செய்துவிட்டாராம். திருச்சியில் பொதுக்கூட்டம் வைத்தால் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து வந்தாலும் தொண்டர்கள் ஆறு மணி நேரத்திற்குள் வீட்டுக்கு திரும்பிவிடலாம் என்ற அறிவுரையின்படி முதல் கூட்டம் திருச்சியில் நடத்த ரஜினி திட்டமிட்டுள்ளாராம்

மேலும் ரஜினியின் கட்சியில் சேர அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் சேர தயாராகி வருகின்றார்களாம். அதேபோல் சிறிய கட்சிகள் நடத்தி வரும் ஒருசிலரும் கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு ரஜினி கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்களாம். எனவே இந்த தீபாவளிக்கு ரஜினியின் பட்டாசு வெடிப்பது உறுதி என ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் கூறுகின்றன