வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 14 மே 2016 (13:45 IST)

20 பேருக்காக 30 வினாடி பிரசாரம் செய்த மத்திய அமைச்சர்

20 பேருக்காக 30 வினாடி பிரசாரம் செய்த மத்திய அமைச்சர்

பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வெறும் 20 பேர் மட்டுமே வந்ததால், அவர் வெறும் 30 வினாடி மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்தார்.
 

 
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மகாமகக்குளம் அருகே அண்ணாசிலை முன்பு பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
 
அப்போது, அவரது பேச்சைக் கேட்க வெறும் 20 பேர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பேச்சை வெறும் 30 வினாடிகளில் முடித்துக் கொண்டார். பின்பு, அங்கிருந்து உடனே புறப்பட்டு சென்றார்.