வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : வியாழன், 31 ஜூலை 2014 (18:27 IST)

காஸ்ட்லி நடிகையான காஜல்

சேல்ஸ் கேர்ளாக இருந்த காஜலை பிடித்து கதாநாயகியாக்கினேனே என்று ஒருமுறை புலம்பினார் அவரை பொம்மலாட்டத்தில் அறிமுகப்படுத்திய பாரதிராஜா. தென்னிந்திய சினிமாவை குறிப்பாக தமிழ் சினிமாவை காஜல் கௌரவக் குறைவாக விமர்சித்த போது அவர் இப்படி சொன்னார்.
நிற்க. விஷயம் இதுதான். தனது தகுதிக்கு மீறி அதிக சம்பளம் கேட்டு வருகிறார் காஜல். தமிழில் அவருக்கு அதிகம் படமில்லாமல் போனதற்கு இந்த அதிக‌‌ப்படி சம்பளம்தான் காரணம்.
 
இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதாக சில மாதங்கள் முன்பு கூறப்பட்டது. சுராஜ் இயக்கும் படம்தான் அது. காஜல் அகர்வால் மெயின் ஹீரோயின், அஞ்சலி இரண்டாவது ஹீரோயின். காஜல் அகர்வாலும் கால்ஷீட் தருவதாக கூறியிருந்தார்.
 

படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் காஜல் ஒன்றரை கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. எழுபந்தைந்து லட்சங்களில் முடியும் என்று நினைத்தவர்கள் ஒன்றரை கோடி என்றதும், அதுக்கு நீங்க வொர்த் இல்லையே என்று பின்வாங்கியிருக்கிறார்கள். படத்தை தயாரிக்கும் லட்சுமி மூவி மேக்கர்ஸ் காஸ்ட்லி காஜலுக்கு கெட் அவுட் சொல்லிவிட்டதாக தகவல்.
ஆனாலும் நமது தயாரிப்பாளர்களை நம்ப முடியாது. அதிகமாக டார்ச்சர் செய்கிறவர்களைதான் விரும்பிப் போய் ஒப்பந்தம் செய்கின்றனர்.
 
சுராஜ் படத்தில் காஜல் உள்ளேயா இல்லை வெளியேயா என்பது இன்னும் ஓரிரு தினங்களில் உறுதியாகிவிடும்.