காதல் படம் எடுக்கும் ஜிகர்தண்டா கார்த்திக் சுப்பாராஜ்
வெவ்வேறு ஜானர்களில் படமெடுத்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை இரண்டே படங்களில் பெற்ற கார்த்திக் சுப்பாராஜ் அடுத்து ரொமான்டிக் கதையை படமாக்கயிருப்பதாக கூறினார்.
கார்த்திக் சுப்பாராஜின் பீட்சா தமிழ் சினிமாவின் போக்கை சற்று திசை திருப்பிய படம். ஜிகர்தண்டா இரு கொரியன் படங்களின் இன்ஸ்பிரேஷன் என்றாலும் படத்தை ரசிகர்கள் விருப்பத்துடன் ரசித்து வெற்றி பெற வைத்தனர்.
அடுத்து அவர் என்ன மாதிரி படத்தை எடுப்பார் என்பது ஆர்வத்தை தூண்டுகிற கேள்வி.
அதற்கு பதிலளித்தவர், ரொமான்டிக் ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதாகவும், இப்போதுதான் ஆரம்பித்திருப்பதால் அதுபற்றி விரிவாக எதுவும் சொல்வதற்கில்லை எனவும் கூறினார்.