1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (12:17 IST)

மீண்டும் யுவன் இசையில் வைரமுத்து பாடல்

இளையராஜா - வைரமுத்து கூட்டணி உடைந்த பின் அவர்களை ஒன்றிணைக்க பலரும் முயற்சி செய்தனர்.


 


கூட்டணி சேர வைரமுத்து எப்போதும் தயார். அதற்கான தாயக்கட்டை விளையாட்டை அவர் அவ்வப்போது ஆடுவதும் உண்டு. ஆனால், அதில் சிக்கிக் கொள்ள இளையராஜா விரும்பியதில்லை.
 
இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் படத்தில் இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வைரமுத்து முதல்முறையாக பாடல்கள் எழுதினார். நான் யுவனுடன் இணைந்தது போல் என்னுடைய மகன்கள் மதன் கார்க்கி, கபிலனை இளையராஜா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு வியாபார அறிக்கையும் வெளியிட்டார் வைரமுத்து. இளையராஜா அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையை கைவிட்டு வருடங்கள் ஆகிறது.
 
சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் இன்னும் வெளியாகாத நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து தர்மதுரை என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கும் யுவன் தான் இசை. வைரமுத்து தான் பாடல்கள்.
 
வெளியாகாத படத்தின் கூட்டணி இரண்டாவது முறையும் உடையாமல் ஒன்றிணைவது ஆச்சரியம்தான்.