1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 9 மே 2017 (15:39 IST)

பாகுபலி 2 படத்தில் காணாமல் போன இந்த கேரக்டர்!!

பாகுபலி 2 படம் வெளியாகி ரூ.1000 கோடிகளை வசூலித்து வெற்றி நடைப்போடுகிறது. இத்தனை நாட்களாக படத்தை பற்றி பலரும் புகழ்ந்து பேசி வந்தனர்.


 
 
இந்நிலையில் தற்போது படத்தில் உள்ள தவறுகளை ஆராய தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பாகுபலி முதல் பாகத்தில் நடிகர் சுதீப் சிறிய வேடத்தில் நடித்திருப்பார். 
 
முதல் பாகத்தில் சத்யராஜிடம் ‘உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள், நான் செய்கிறேன்’ என சுதீப் கூறி செல்வார்.
 
இவரது இந்த வசனத்தால் இரண்டாம் பாகத்தில் சுதீப் உதவி செய்ய வருவார் என எதிப்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை அவர் படத்தில் வரவே இல்லை.
 
எனவே, முதல் பாகத்தில் மட்டும் எதற்காக சுதீப் நடித்த காட்சிகளை வைத்தனர் என கேள்வி எழுப்பியுள்ளனர்.