வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 29 ஜனவரி 2015 (13:18 IST)

அஜீத் தொடர்ந்து புறக்கணிப்பு - விக்ரமை நாடிச் சென்ற முருகதாஸ்

அஜீத் நடித்த தீனா படத்தின் மூலம் இயக்குனரானவர் முருகதாஸ். மீண்டும் அஜீத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். ஆனால், அஜீத் முருகதாஸை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
துப்பாக்கி முடிந்த உடனேயே, அஜீத்தை வைத்து படம் இயக்க ஆர்வமாக உள்ளதாக முருகதாஸ் வெளிப்படையாக அறிவித்தார். அஜீத்துக்கான கதை தயாராக இருப்பதாகவும், அவர் சம்மதித்தால் உடனே படப்பிடிப்புக்கு கிளம்பிவிடலாம் என்றும் கூறினார். ஆனால், அஜீத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை.
 
கத்தி முடிந்த பிறகு மீண்டும் அஜீத் படம் குறித்து பேச ஆரம்பித்தார் முருகதாஸ். அஜீத்தின் கட்டளைக்காக காத்திருக்கிறேன் என்று இறங்கியும் வந்துப் பார்த்தார். அஜீத் வாய் திறக்கவில்லை.
 
இதற்கு மேலும் காத்திருப்பதில் பலனில்லை என்ற நிலையில் முருகதாஸ் விக்ரமை வைத்து படம் செய்ய தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
 
முருகதாஸ் இந்தியில் மௌனகுரு படத்தை சோனாக்ஷி சின்காவை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார். சில காரணங்களால் அந்த புராஜெக்ட் தள்ளிப் போயுள்ளது.
 
தற்போது விக்ரம் ஃபாக்ஸ் ஸ்டாரும், முருகதாஸும் இணைந்து தயாரிக்கும் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார்.