ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (17:00 IST)

339 கிலோ எடையில் ..பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லெட் சிலை

கடந்த செப்டம்பர் மாதம்  இந்தியாவில் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார். புதுச்சேரியில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் 5.8 அடி உயரத்தில்  339 கிலோ எடையில் சாக்லெட் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இவரது மறைவு ஒட்டுமொத்த சினிமாத் துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு மக்களும் தங்கள் வீடுகளில் நடந்த இழப்பைப் போல  கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ், 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் 5.8 அடி உயரத்தில்  339 கிலோ எடையில் கேக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.