1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2016 (13:03 IST)

வாகா... இந்திய எல்லையில் ஒரு தமிழ்ப் படம்

வாகா... இந்திய எல்லையில் ஒரு தமிழ்ப் படம்

ஜி.என்.ஆர்.குமரவேலனின் இயக்கத்தில் தயாராகியிருக்கிறது, வாகா. இந்திய, பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், இந்திய பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் குறித்து பிரதானமாக வருகிறது. 


 

 
 
ராணுவத்துக்கும், பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ராணுவத்தைவிட இதன் பணி கடுமையானது. அப்படியொரு பார்டர் செக்யுரிட்டி ஃபோர்ஸ் வீரராக விக்ரம் பிரபு இதில் வருகிறார். தெரியாத தொழில், இடம் என்பதால் பல மாதங்கள் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸில் இருப்பவர்களிடம் பேசி பழகி இந்த வேடத்தை வடிவமைத்திருக்கிறார்கள். படமும் அப்படியே உருவாகியிருக்கிறது. 
 
பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸில் 3 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையை வாகா முதல்முறையாக படம் பிடித்திருக்கிறது. 
 
விக்ரம் பிரபு இதுவரை நடித்தப் படங்களில் இதுவே கனமான கதையை கொண்டது. வாகாவின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.