வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:58 IST)

நடுரோட்டில் பரதம் ஆடிய ரம்யா! மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. 
ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 
 
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய  ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.
 
சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது நடிகை ரம்யா பரதத்தில் ஆர்வம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடுரோட்டில் பரதம் ஆடிய வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.   
 
ரம்யாவின் இந்த நாட்டிய திறமையை பலரும் பாராட்டிவந்தாலும் ஒரு சிலரோ தமிழ் படத்தில் நடிகர் சிவா பரதநாட்டியம் ஆடும் காட்சி போலவே இருக்கிறது என்று ரம்யாவை கிண்டலடித்து வருகின்றனர்.