வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (11:22 IST)

விஜய் சேதுபதியின் 4வது முறையாக இணையும் இயக்குநர்

‘தர்மதுரை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நான்காவது முறையாக நடிக்க உள்ளார்.


 

‘சுந்தர பாண்டியன்’ உள்ளிட்ட பல படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தவர் விஜய் சேதுபதி. அவரை, தன்னுடைய ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக்கினார் சீனு ராமசாமி. இந்தப் படத்துக்குப் பிறகுதான் விஜய் சேதுபதியை ஊர், உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தது. அதனால், சீனு ராமசாமி மீது விஜய் சேதுபதிக்கு தனி மரியாதை உண்டு. சீனு ராமசாமியும் அவர் மேல் பிரியமாகவே இருப்பார். அதனால்தான் ‘தர்மதுரை’ படத்தில் ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தைக் கொடுத்து மகிழ்ந்தார்.

இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இணைந்த ‘இடம் பொருள் ஏவல்’ படம், இன்னும் ரிலீஸாகவில்லை. ஆனால், மூன்றாவதாக இணைந்த ‘தர்மதுரை’, 100 நாட்கள் ஓடியது.

இந்நிலையில், நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. படத்துக்கு, ‘மாமனிதன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தற்போது ‘கொலையுதிர் காலம்’ படத்தைத் தயாரித்துவரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, அடுத்ததாக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜாவும், யுவனும் இணைந்து இசையமைக்கின்றனர் என்ற பேச்சு அடிபடுகிறது.