வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (15:45 IST)

தோல்வியை தழுவியதால் விஜய் ஆண்டனி எடுத்த அதிர்ச்சி முடிவு

தமிழ் சினிமாவில் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி தற்போது திமிரு பிடிச்சவன் படைத்தல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
 
இவர் நடிப்பில் இன்று வெளியான திமிரு பிடிச்சவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் இவரின் நடிப்பில் வெளிவரும் படங்கள் கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வியை தழுவி வருகிறது . பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படமும் இவருக்கு அமையவில்லை. 
 
தொடர் தோல்வியால் முதலீடு செய்த பணத்தை எடுக்க  முடியாமல் திணறிய விஜய் ஆண்டனி பலரிடத்தில் கடன் வாங்கியுள்ளார்.இதனால் இனி இரண்டு வருடத்திற்கு படம் தயாரிக்காமலும், இசையமைக்காமலும் இருக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.