1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (07:44 IST)

வெறித்தனமாக கட்டிப்பிடித்த வேல்முருகன்: அதிர்ச்சியில் சனம்ஷெட்டி!

வெறித்தனமாக கட்டிப்பிடித்த வேல்முருகன்: அதிர்ச்சியில் சனம்ஷெட்டி!
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காக டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் ஷிவானி, பாலாஜி முருகதாஸ், ஆரி, அறந்தாங்கி நிஷா உள்பட ஒருசிலர் நன்றாக விளையாடினாலும் இறுதியில் சனம்ஷெட்டி- வேல்முருகன் கூட்டணியே வெற்றி பெற்றது
 
இந்த வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்த பிக்பாஸ், அடுத்த வாரம் சனம்ஷெட்டி, வேல்முருகன் ஆகிய இருவரையும் யாரும் நாமினேஷன் செய்யக்கூடாது என்று அறிவித்தார்
 
இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டவுடன் வேல்முருகன் துள்ளிக் குதித்தார். தனது கூட்டாளியான சனம் ஷெட்டியை அவர் வெறித்தனமாக கட்டிப்பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் சனம்ஷெட்டியே கொஞ்சம் நெளிந்து அவரிடமிருந்து விலக முயற்சித்ததும், ஆனாலும் வேல்முருகன் விடாமல் அவரை இறுக்கமாக கட்டிப்பிடித்து தனது சந்தோஷத்தைக் வெளிக்காட்டியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வேல்முருகன் சனம்ஷெட்டியை சகோதரி என்று தான் அழைத்து கொண்டிருக்கிறார் என்பதும் இந்த கட்டிப்பிடித்தலில் எந்த விதமான தவறான எண்ணமும் இல்லை என்றாலும் சனம்ஷெட்டி, வேல்முருகனின் செயலை பார்த்து நெளிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி இந்த கட்டிப்பிடித்தல் குறித்த மீம்ஸ்களும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது