1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (15:42 IST)

இவன பார்த்தாலே பீதியா இருக்கு இதுல உம்மா வேற கொடுக்குறீங்களே வரலக்ஷ்மி!

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.
 
நடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் வளர்க்கும் செல்ல நாயை கட்டி அனைத்து முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு பதற வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.