வாடிவாசல் நாவலின் உரிமையை வாங்கிய வெற்றிமாறன்
வாடிவாசல் நாவலின் உரிமையை வாங்கிய வெற்றிமாறன்
விசாரணை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வெற்றிமாறன் வடசென்னை படத்தை எடுப்பதாக இருந்தார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக வாடிவாசல் நாவலின் உரிமையை அவர் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சி.சு.செல்லவப்பா எழுதிய வாடிவாசல் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தமிழில் எழுதப்பட்ட முதல் மற்றும் முக்கிய நாவல் இதுவாகும்.
இந்த நாவலை அடுத்து வெற்றிமாறன் படமாக்குகிறார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.