1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (05:20 IST)

படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து தூக்கிடுவேன். பிரபல நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர்

நடிகைகளுக்கு வெளீயில் இருந்து மட்டுமின்றி திரையுலகிலும் பாலியல் தொல்லை உள்ளது என்பது அவ்வப்போது வெளிவரும் செய்திகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி தொடரின் தயாரிப்பாளர் ஒருவர் மீது அந்த தொடரில் நடிக்கும் நடிகை பாலியல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.



 


சஞ்சய் கோஹ்லி என்பவர் நடிகை ஷில்பா ஷிண்டே நடித்துவரும் தொலைக்காட்சி தொடரான பாபி ஜி கர் பர் ஹை என்ற பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரை  தனது மனைவியுடன் சேர்ந்து தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் சஞ்சய் மீது மும்பை போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார் நடிகை ஷில்பா. இது குறித்து ஷில்பா கூறுகையில், 'படப்பிடிப்பு தளத்தில் சஞ்சய் என்னிடம் தவறாக நடந்து கொள்கிறார்.. என்னை அடிக்கடி செக்ஸி என்று அழைப்பது மட்டுமின்றி காரணமே இல்லாமல் என் மீது கை வைக்கின்றர். மேலும் தன்னுடன் படுக்கைக்கு வராவிட்டால் தொலைக்காட்சி தொடரில் இருந்து நீக்கிவிடுவிடுவதாக மிரட்டினார். நான் அவருடைய ஆசைக்கு இணங்காததால் என்னை தொடரில் இருந்து நீக்கிவிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.