1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 23 மார்ச் 2017 (21:26 IST)

நடிகர் செந்திலுக்கு சூர்யா கொடுத்த வாழைப்பழம்.

தமிழ் சினிமாவில் 'வாழைப்பழ காமெடி' என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடிதான். சுமார் 30 வருடங்கள் ஆகிய பின்னரும் இந்த காமெடி காட்சிக்கு இன்று மவுசு உண்டு



இந்நிலையில் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் செந்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்று சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட செந்திலுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடிய செந்தில் படப்பிடிப்புக்கு தளத்திற்கு வந்தவுடன் வாழைப்பழம் போன்ற சைஸில் கேக் செய்து செந்திலை வெட்ட செய்து படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்

படக்குழுவினர்களின் இந்த வாழைப்பழ கேக் ஏற்பாட்டை அறிந்த செந்தில் ஆனந்தக்கண்ணீர் வடித்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.