வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2018 (13:09 IST)

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் இயக்குநர்

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து இயக்க இருக்கிறார் அருண் குமார்.
‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் குமார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், துளசி, பால சரவணன் ஆகியோர் நடித்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘சேதுபதி’ படத்தை இயக்கினார் அருண் குமார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு  ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார்.
 
சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தைத் தொடர்ந்து, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து இயக்க இருக்கிறார் அருண் குமார். கையில் உள்ள சில படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.