நடிகர் விஷ்ணுவை மருத்துவமனையில் நலம் விசாரித்த அஜீத்
நடிகர் விஷ்ணுவை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார் அஜீத்.
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சார்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறவர் நடிகர் விஷ்ணு. 2012 -இல் நடந்த போட்டியின் போது கையில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து அவரது கையில் மெட்டல் பிளேட் பொருத்தப்பட்டது. அதே பிளேட்டுடன் அடுத்தடுத்த வருடங்களில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு ரன்களை குவித்தார் விஷ்ணு.
நேற்று அவரது கையில் பொருத்தப்பட்டிருந்த மெட்டல் பிளேட் அகற்றப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில்தான் ஷாலினிக்கு பிரசவம் நடந்தது. விஷ்ணு மருத்துவமனையில் இருப்பதை அறிந்த நடிகர் அஜீத் அவரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
அஜீத் தன்னை சந்தித்தது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவர் எளிமையான இனிமையான மனிதர் என விஷ்ணு தெரிவித்தார்.