வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 7 ஏப்ரல் 2018 (16:14 IST)

ஸ்டிரைக் தொடர்ந்தால் விஷால் முன்பு தீக்குளிப்பேன்; பரபரப்பை ஏற்படுத்திய சினிமா பிரமுகர்

ஸ்டிரைக் தொடர்ந்தால் விஷால் முன்பு தீக்குளிப்பேன் என்று தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளர் கூறியிருப்பது திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை குறைக்க வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் தொடங்கப்பட்டது. இதனால் மார்ச் மாதம் முழுவதும் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று வரை ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் ஸ்டிரைக் தொடர்ந்தால் விஷால் முன்பு தீக்குளிப்பேன் என்று  தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளர் தனபால் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனபால் விஷால் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இறந்தால்தான் எல்லோருக்கும் தெரியவரும் என்று கூறியுள்ளார்.