1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2016 (11:28 IST)

500, 1000 நோட்டுகள் ஒழிந்ததால் நடிகர்களின் சம்பளம் குறையும்

இந்திய சினிமாவில் பாதிக்குப் பாதி கணக்கில் வராத திருட்டுப் பணம்தான் புழங்குகிறது. மோடியின் அதிரடி நடவடிக்கையால் 500, 1000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டதால் திருட்டுப் பணம் வைத்திருப்பவர்கள் படம் எடுக்க வர மாட்டார்கள், நடிகர்களின் சம்பளமும் குறையும் என விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் பிரபல இணையதளத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.


 

தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களின் வசூல் விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவது என முடிவு செய்துள்ளது. அப்படி வெளியிட்டால் நடிகர்களின் உண்மையான மார்க்கெட் நிலவரம் தெரியவரும், அவர்கள் அதிகம் சம்பளம் கேட்பதை தவிர்க்கலாம் என்று தயாரிப்பாளர்களுக்கு யோசனை சொன்னவர் திருப்பூர் சுப்பிரமணியன்.

இப்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதால் நடிகர்களின் சம்பளம் குறையும் என கூறியுள்ளார்.

நடக்கிறதா பார்ப்போம்.