1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (15:42 IST)

சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கை போலிஸாரிடம் தாக்கல்!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கை மும்பை போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34)  நேற்று மதியம் மர்மமான முறையில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை மும்பை போலிசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் சுஷாந்த், தூக்கு போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் உயிர் போனதாக சொல்லப்பட்டு உள்ளது.

ஆனால் சுஷாந்தின் உறவினர்கள் அவரது மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும், அதனால் விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.