1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 13 மார்ச் 2024 (11:45 IST)

சிவகார்த்திகேயன் 23 ஆவது படத்தின் ரிலீஸ் திட்டம்… பண்டிகை தேதியை லாக் செய்து கல்லா கட்டா பிளான்!

தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கி சில நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை முடித்ததும் முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளார்.

இதனால் சிவகார்த்திகேயன் படத்தை அவர் வேகமாக முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.