1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : புதன், 26 ஜூலை 2017 (22:42 IST)

சிம்புவை ஊரைவிட்டே விரட்ட காத்திருக்கும் ரஜினி-அஜித்

சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தோல்வியால் அவர் கிட்டத்தட்ட திரையுலகில் இருந்தே விரட்டப்பட்டார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே



 
 
மேலும் சிம்புவின் கேரக்டர் அறிந்து அவரை எந்த இயக்குனரும் இயக்கவும், எந்த தயாரிப்பாளரும் தயாரிக்கவும் இனி முன்வர மாட்டார்கள் என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.
 
இந்த நிலையில் ரஜினியும் அஜித்தும் நடித்த சூப்பர் ஹிட் படமான 'பில்லா' படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து இழந்த அனைத்து புகழையும் ஒரே படத்தில் மீட்டுவிட சிம்பு முடிவு செய்துள்ளாராம்
 
ஆனால் அவர் இந்த படத்தை தயாரித்து, இயக்கவும் உள்ளாராம். எனவே இதுவரை திரையுலகில் சம்பாதித்த புகழை இழந்த சிம்பு, இனிமேல் தயாரித்து, இயக்கப்போகும் படத்தால் இதுவரை சம்பாதித்த பணத்தையும் இழந்து ஊரைவிட்டே விரட்டப்படும் சூழ்நிலை வரும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.